இஷ்டா1ன்போ4கா3ன்ஹி வோ தே3வா தா3ஸ்யன்தே1 யஞ்ஞபா4விதா1: |
தை1ர்த3த்1தா1னப்4ரதா3யைப்4யோ யோ பு4ங்க்1தே1 ஸ்தே1ன ஏவ ஸ: ||12||
இஷ்டான்—--விரும்பிய; போகான்—--வாழ்க்கையின் தேவைகள்; ஹி—--நிச்சயமாக; வஹ—-- உனக்கு; தேவாஹா—-- தேவலோக தேவர்கள்; தாஸ்யன்தே—--வழங்கும்; யஞ்ஞ-பாவிதாஹா---தியாகத்தால் திருப்தியடைந்தவர்; தைஹி அவர்களால்; தத்தான்—--அனுமதிக்கப்பட்டவை; அப்ரதாய—--ப்ரஸாதம் இல்லாமல்; ஏப்யஹ—--அவர்களுக்கு; யஹ—--யார்; புங்க்தே---மகிழ்கிறார்; ஸ்தேனஹ—--திருடர்கள்; ஏவ—--உண்மையாக; ஸஹ--—அவர்கள்
BG 3.12: யாகம் செய்வதால் திருப்தி அடைகிற தேவலோக தெய்வங்கள், உங்களுக்கு தேவையான அனைத்து வாழ்க்கைத் தேவைகளையும் வழங்குவார்கள். ஆனால், ப்ரதிபலன் செய்யாமல் கொடுத்ததை அனுபவிப்பவர்கள், உண்மையிலேயே திருடர்கள்.
ப்ரபஞ்சத்தின் பல்வேறு செயல்முறைகளின் நிர்வாகிகளாக, தேவர்கள் நமக்கு மழை, காற்று, பயிர்கள், தாவரங்கள், தாதுக்கள், வளமான மண் மற்றும் பிற வளங்களை வழங்குகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் பெறும் அனைத்திற்கும் மனிதர்களாகிய நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம். தேவலோக தேவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள், நாம் நமது கடமையை சரியான உணர்வில் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த தேவலோக கடவுள்கள் அனைவரும் ஒப்புயர்வற்ற கடவுளின் சேவகர்கள் என்பதால், அவருக்காக யாராவது ஒரு யாகம் செய்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், மேலும் சாதகமான பொருள் நிலைமைகளை உருவாக்குவதன் மூலம் அத்தகைய ஆத்மாவுக்கு உதவுகிறார்கள். இவ்வாறு, கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானிக்கும்போது, ப்ரபஞ்சம் நமக்கு ஒத்துழைக்கத் தொடங்குகிறது என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இயற்கையின் கொடைகளை, இறைவனுக்குச் சேவை செய்வதற்கான வழிமுறையாக இல்லாமல், நம் சொந்த இன்பத்திற்கான பொருளாகப் பார்க்கத் தொடங்கினால், ஸ்ரீ கிருஷ்ணர் அதை ஒரு திருட்டு மனநிலை என்கிறார். 'நான் நல்லொழுக்கமுள்ள வாழ்க்கையை நடத்துகிறேன்; நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை, எதையும் திருடவும் இல்லை. ஆனால் நான் கடவுளையோ, அவரை வழிபடுவதையோ நம்பவில்லை. நான் ஏதாவது தவறு செய்கிறேனா?’ என்ற கேள்வியை பெரும்பாலான மக்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு மேற்கண்ட வசனத்தில் பதில் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மனிதர்களின் பார்வையில் தவறு செய்யாமல் இருக்கலாம், ஆனால் கடவுளின் பார்வையில் அவர்கள் திருடர்கள். ஒரு உதாரணமாக நாம் யாரோ ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து, உரிமையாளரை அடையாளம் காணாமல், சோபாவில் அமர்ந்து, குளிர்சாதன பெட்டியில் இருந்து சாப்பிடுகிறோம், கழிவறையைப் பயன்படுத்திவிட்டு, நாம், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறலாம், ஆனால், அந்த வீடு நமக்கு சொந்தமானது அல்ல என்பதால், சட்டத்தின் பார்வையில் திருடர்களாகவே கருதப்படுவோம். அதுபோலவே, நாம் வாழும் உலகம் இறைவனால் படைக்கப்பட்டது அதிலுள்ள அனைத்தும் அவருக்கே சொந்தம். அவருடைய ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளாமல் நாம் அவருடைய படைப்பை நம் மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்தினால், தெய்வீகக் கண்ணோட்டத்தில், நாம் நிச்சயமாக திருடர்கள் ஆகிறோம்.
இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற மன்னர், சந்திரகுப்தா, தனது குருவான சாணக்கிய பண்டிதரிடம், ‘வேத ஶாஸ்திரங்களின்படி, தனது குடிமக்களுக்கு எதிராக ஒரு அரசரின் நிலை என்ன?’ என்று கேட்டார்.
அதற்கு சாணக்கிய பண்டிதர், ‘அரசர் குடிமக்களின் வேலைக்காரரே தவிர வேறொன்றுமில்லை. கடவுள்-உணர்தல் நோக்கிய பயணத்தில் அவரது ராஜ்யத்தின் குடிமக்கள் முன்னேற உதவுவதே அவருக்கு கடவுளால் நியமிக்கப்பட்டகடமை’ என்று கூறினார்.
ராஜா, வியாபாரி, விவசாயி, மற்றும் தொழிலாளியாக இருந்தாலும், ஒவ்வொரு நபரும், கடவுளின் உலகத்தின் ஒருங்கிணைந்த உறுப்பினராக, தனது கடமையைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஷ்டா1ன்போ4கா3ன்ஹி வோ தே3வா தா3ஸ்யன்தே1 யஞ்ஞபா4விதா1: |
தை1ர்த3த்1தா1னப்4ரதா3யைப்4யோ யோ பு4ங்க்1தே1 ஸ்தே1ன ஏவ ஸ: ||12||
யாகம் செய்வதால் திருப்தி அடைகிற தேவலோக தெய்வங்கள், உங்களுக்கு தேவையான அனைத்து வாழ்க்கைத் தேவைகளையும் வழங்குவார்கள். ஆனால், ப்ரதிபலன் செய்யாமல் கொடுத்ததை அனுபவிப்பவர்கள், உண்மையிலேயே திருடர்கள்.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily